
சர்வதேச துப்பாக்கி சுடுதல் 10 மீ. ஏர் பிஸ்டல் தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் இளம் வீரர் ஷஸார் ரிஸ்வி முதலிடம் பிடித்து அசத்தினார்..
கொரியாவின் சங்வானில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடைபெற்றன. இதில் ரிஸ்வி 10 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். 1654 புள்ளிகளுடன் அவர் வெள்ளி வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், கடந்த மார்ச் மாதம் மெக்ஸிகோவில் நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் ரிஸ்வி உலக சாதனையுடன் தங்கம் வென்றிருந்தார் என்பது கூடுதல் தகவல்.
இந்த நிலையில் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் வெளியிட்ட பட்டியலில் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் ரிஸ்வி முதலிடம் பெற்றுள்ளார். மற்ற இந்திய வீரர்களான ரவிக்குமார் 4-வது இடமும், தீபக்குமார் 9-ஆம் இடமும் பிடித்து உள்ளனர்.
அதேபோன்று, 50 மீ. ரைபிள் பிரிவில் அகில் ஷரோன் 4-வது இடமும், சஞ்சீவ் ராஜ்புத் 8-வது இடமும் பிடித்தனர்.
மகளிர் பிரிவில் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மனு பேக்கர் இதே பிரிவில் 4-ஆம் இடம் பெற்றுள்ளார். மெஹுலி கோஷ் 7-வது இடமும், அபூர்வி சந்தேலா 11-வது இடமும், அஞ்சும் 12-வதுஇடமும் பிடித்துள்ளனர்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.