முதல் உலக ஸ்குவாஷ் சாம்பியன் பட்டதை வென்றார் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார்...

 
Published : Apr 24, 2018, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 02:17 AM IST
முதல் உலக ஸ்குவாஷ் சாம்பியன் பட்டதை வென்றார் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார்...

சுருக்கம்

India Velavan Senthilkumar won the first World Squash Champion

மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் 255-ஆம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டத்தை வென்று அசத்தினார். 

மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், வேலவன் செந்தில்குமார் தனது இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஐசெலெவை எதிர்கொண்டார். 

விறுவிறுப்பான இந்த ஆட்டம் 56 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதில், 7-11, 13-11, 12-10, 11-4 என்ற செட்களில் வேலவன் வெற்றி பெற்றார்.

பிரிட்டிஷ் ஜூனியன் ஓபன், ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த வேலவன், முதல் முறையாக வெல்லும் சீனியர் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பாக அவர் 2 உலக டூர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேலவன், இப்போட்டியில் தனது முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பெர்னாட் ஜுவாமேவை வீழ்த்தினார். 

அதன்பின்னர் காலிறுதியில் இங்கிலாந்தின் மார்க் ஃபுல்லரையும், அரையிறுதியில் சகநாட்டவரான ஆதித்யா ஜகதாப்பையும் தோற்கடித்து வாகை சூடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

இந்தியா vs தென்னாப்பிரிக்கா டி20 தொடரை எந்த டிவியில் பார்க்கலாம்? போட்டிகள் தொடங்கும் நேரம்?
கிரிக்கெட்டை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? ஐபிஎல் உரிமையாளரை விளாசிய கவுதம் கம்பீர்! என்ன நடந்தது?