
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் மகளிர் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் பிரேசில் அணி தான் ஆடிய 7 லீக் ஆட்டங்களிலுமே வெற்றி கண்டிருந்தது.
இதனிடையே, ரௌண்ட் ராபினின் கடைசி ஆட்டத்தில் 4 புள்ளிகளுடன் இருந்த சிலி, 3 புள்ளிகளுடன் இருந்த ஆர்ஜென்டீனாவை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தியது.
அதனையடுத்து, பிரேசிலுக்கான வெற்றி ஏறத்தாழ உறுதியானது. அதேவேளையில், சிலியும் தனது உலகக் கோப்பை போட்டி வாய்ப்பை உறுதி செய்தது.
இந்த நிலையில், ஒரு புள்ளியுடன் இருந்த கொலம்பியாவை இறுதி ஆட்டத்தில் 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சாம்பியன் வென்றது பிரேசில் மகளிரணி.
இந்த வெற்றியின் மூலமாக, அடுத்த ஆண்டு பிரான்ஸில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கும், 2020-ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் பிரேசில் மகளிர் அணி தகுதிப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி 8-வது வருடமாக நடக்கிறது என்பதும், இந்தப் போட்டியில், பிரேசில் அணி 7-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பதும் கூடுதல் தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.