தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரின் ஃபைனலில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷிய அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது இந்திய அணி.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடர் நடந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் 14 முறை சாம்பியனான பலம் வாய்ந்த இந்தோனேஷிய அணியை எதிர்கொண்டு ஆடியது இந்திய அணி.
இரட்டையர் பிரிவில் இந்தோனேஷிய அணி மீது தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் ரங்கி ரெட்டி, சீரக் ஷெட்டி ஜோடி 3-0 என வீழ்த்தி வெற்றி பெற்று தங்கத்தை வென்றது.
தாமஸ் கோப்பை பேட்மிண்டன் தொடரில் 14 முறை சாம்பியனான இந்தோனேஷிய அணியை வீழ்த்தி முதல் முறையாக தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்தது இந்திய அணி.