ஐடிடிஎப் உலக டூர் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் வென்றது இந்தியா…

 
Published : May 02, 2017, 11:51 AM ISTUpdated : Sep 19, 2018, 03:13 AM IST
ஐடிடிஎப் உலக டூர் போட்டியில் முதல்முறையாக சாம்பியன் வென்றது இந்தியா…

சுருக்கம்

India has won the championship title for the first time in the ITF World Tour competition.

சிலி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் செளம்யஜித் கோஷ் – அந்தோணி அமல்ராஜ் இணை வெற்றிப் பெற்று முதல்முறையாக இந்தியாவிற்கு தங்கம் பெற்றுத் தந்துள்ளனர்.

சிலி ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி சிலி தலைநகர் சான்டியாகோவில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ், சகநாட்டவரான அந்தோணி அமல்ராஜுடன் மோதினார்.

இதில், 8-11, 13-11, 11-6, 11-9, 4-11 11-7 என்ற செட் கணக்கில் அந்தோணி அமல்ராஜை தோற்கடித்து வாகைச் சூடினார் சௌம்யஜித்.

இந்த வெற்றியின் மூலம் ஐடிடிஎப் உலக டூர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் சௌம்யஜித் கோஷ்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் செளம்யஜித் கோஷ் - அந்தோணி அமல்ராஜ் ஜோடி 13-11, 10-12, 14-12, 11-9 என்ற செட் கணக்கில் பல்கேரியாவின் பிலிப் புளோரிட்ஸ் - ருமேனியாவின் ஹுனார் சாக்ஸ் இணையை வீழ்த்தியது.

இதனால், ஆடவர் இரட்டையர் பிரிவிலும் இந்தியா சாம்பியன் வென்றுள்ளது.

ஐடிடிஎப் சேலஞ்ச் அல்லது ஐடிடிஎப் உலக டூர் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றிருப்பதும் இதுவே முதல்முறை.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!