நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் தீட்டியுள்ளது இந்தியா – கோலி…

Asianet News Tamil  
Published : Jun 17, 2017, 10:24 AM ISTUpdated : Sep 19, 2018, 12:46 AM IST
நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்த திட்டம் தீட்டியுள்ளது இந்தியா – கோலி…

சுருக்கம்

India has plan to defeat Pakistan in final match

நாளை நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த சில திட்டங்களை வகுத்துள்ளோம் என்று இந்திய கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் இடையிலான இறுதி ஆட்டம் நாளை நடைபெறவுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த கோலி கூறியது:

“இதுவரை நாங்கள் சிறப்பாகவே ஆடி வந்திருக்கிறோம். அதேபோன்றதொரு ஆட்டத்தை பாகிஸ்தானுக்கு எதிராகவும் வெளிப்படுத்த முயற்சிப்போம்.

அந்த அணியின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பது எங்களுக்குத் தெரியும். அதற்கேற்றவாறு நாங்கள் சில திட்டங்களை வகுத்துள்ளோம்.

போட்டியின்போது நாங்கள் எங்களின் கிரிக்கெட் அறிவு மற்றும் ஆற்றல் சார்ந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். எங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இது சாத்தியமானால் வெற்றி கிடைக்கும்.

ஒரு போட்டியில் களமிறங்குகிறபோது, நீங்கள் நல்ல மனநிலையில் இல்லாவிட்டால், அதில் சதமடித்தாலோ அல்லது உங்கள் அணி வெற்றி பெற்றாலோ அது ஒரு விஷயமே இல்லை. ஆனால், சில நேரங்களில் நீங்கள் டக் அவுட்டானாலும்கூட, அந்த ஆட்டத்தில் அணி வெற்றி பெறும்போது உங்களுக்குள் மகிழ்ச்சியான உணர்வு ஏற்படும். இப்படித்தான் கிரிக்கெட் விளையாட்டு இருக்கும். அதுதான் கிரிக்கெட்டின் அழகு.

இறுதி ஆட்டத்தைப் பொறுத்தவரையில் ரசித்து விளையாட விரும்புகிறோம். அதற்கு நாங்கள் தகுதியானவர்கள். இதுவரையில் நாங்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறோம். அதற்காக நாங்கள் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம்.

ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோமா அல்லது ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோமா என்பது ஒரு விஷயம் அல்ல. நாங்கள் கடந்த ஆட்டங்களில் விளையாடியதைப் போன்றே பாகிஸ்தானுக்கு எதிரான இறுதி ஆட்டத்திலும் விளையாட முயற்சிப்போம். ஓர் அணியாக இ'ணைந்து செயல்படுகிறபோது வெற்றி தானாகவே வரும் என நம்புகிறோம்.

பாகிஸ்தானின் ஆட்டம் என்னை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அவர்கள் மிக அற்புதமாக விளையாடியிருக்கிறார்கள். இறுதி ஆட்டத்துக்கு முன்னேற வேண்டுமானால், அதற்கு நன்றாக விளையாட வேண்டும். அந்த வகையில் பாகிஸ்தானை பாராட்டியே ஆக வேண்டும். அவர்கள் ஆரம்பத்தில் தடுமாறினாலும், பின்னர் அபாரமாக ஆடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கிறார்கள்” என்று கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

எல்லை மீறி போறீங்க டா.. RCBக்கு எதிராக பஞ்சாயத்தை கூட்டிய CSK..! BCCIயிடம் முறையீடு..
CSK Replacement: கலீல் அவுட், CSK-க்கு அடுத்தது யார்? இந்த 3 பௌலர்கள் தான் லிஸ்ட்ல இருக்காங்க!