டிராவில் முடிந்த இந்தியா – குவைத் போட்டி: இந்தியாவுக்கு அரையிறுதி கன்ஃபார்ம்!

Published : Jun 28, 2023, 12:13 AM IST
டிராவில் முடிந்த இந்தியா – குவைத் போட்டி: இந்தியாவுக்கு அரையிறுதி கன்ஃபார்ம்!

சுருக்கம்

இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான தெற்காசிய கால்பந்து போட்டி டிராவில் முடிந்துள்ளது.

தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடி வருகின்றன. இதில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதிய போட்டியில் இந்திய கேப்டன் சுனில் சேத்தரி ஹாட்ரிக் கோல் அடிக்க இந்தியா 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பையை வெல்ல பாகிஸ்தானுக்கே அதிக வாய்ப்புகள் உள்ளது – வாசீம் அக்ரம்!

இந்தப் போட்டியைத் தொடர்ந்து இந்தியா, நேபாள் அணியை எதிர்கொண்டது. போட்டி தொடங்கிய முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவே இல்லை. ஆகையால், முதல் அரைமணி நேரம் டிராவில் முடிந்தது. கடைசியாக நடந்த 5 போட்டிகளில் முதல் அரை மணி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில், 4 போட்டிகளில் கேப்டன் சுனில் சேத்தரி கோல் அடித்தார். ஒரு போட்டி டிராவில் முடிந்தது. அதன் பிறகு கேப்டன் சுனில் சேத்தரி ஒரு கோல் அடித்து கொடுக்க, இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இது சுனில் சேத்தரி அடித்த 91ஆவது கோல் ஆகும்.

ராம் அரவிந்த் அதிரடியால் லைகா கோவை கிங்ஸ் 199 ரன்கள் குவிப்பு!

இதைத் தொடர்ந்து, மகேஷ் நௌரேம் சிங் தனது முதல் கோல் அடித்துக் கொடுக்க, இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. கடைசியாகவும் இந்தியாவிற்கு கோல் அடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனினும், அதில் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியாக இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் நேபாள் அணியை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் குவைத் அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தது. இதில், போட்டியின் 45 ஆவது நிமிடத்தில் இந்திய கேப்டன் சுனில் சேத்தரி ஒரு கோல் அடிக்க இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. போட்டியின் 2ஆவது பாதியிலும் இந்திய அணி சிறப்பாக விளையாடியது.

முழங்கால் காயம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் லோன் – பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டேன் – சுரேஷ் ரெய்னா!

இதில், 90ஆவது நிமிடம் முடிந்த பிறகு கூடுதல் நிமிடம் வழங்கப்பட்டது. அப்போது இந்திய அணி வீரர் அன்வலி அலி தவறு செய்யவே, குவைத் அணிக்கு கோல் வழங்கப்பட்டது. இதன் காரணமாக போட்டி நேரம் முடியவே இந்தியா மற்றும் குவைத் அணிகள் 1-1 என்று சமநிலை பெற்றன. எனினும், இந்தியா மற்றும் குவைத் அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?