இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் ஆட்டம் எப்போது? பிசிசிஐ அறிவிப்பு...

Asianet News Tamil  
Published : Dec 26, 2017, 10:16 AM ISTUpdated : Sep 19, 2018, 01:44 AM IST
இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகள் மோதும் ஆட்டம் எப்போது? பிசிசிஐ அறிவிப்பு...

சுருக்கம்

India - England women cricket teams match BCCI announces ...

இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஏப்ரலில் நடைபெறவுள்ளது என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்தியா - இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் திட்டத்தின் கீழ் நடைபெறும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இந்த ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் 2018 ஏப்ரல் 8-ஆம் தேதியும், 2-ஆவது ஆட்டம் 11-ஆம் தேதியும், 3-ஆவது மற்றும் கடைசி ஆட்டம் 14-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.

கடந்த ஜூன் மாதம் மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய நிலையில், அதில் இங்கிலாந்து வென்று கோப்பையை கைப்பற்றியுள்ளது.

இந்த நிலையில் அந்த இரு அணிகளும் மீண்டும் சந்திக்கின்றன. இந்த ஒருநாள் தொடரானது, இந்தியா - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் கலந்து கொள்ளும் முத்தரப்பு டி20 கிரிக்கெட் தொடருக்குப் பிறகு நடைபெறவுள்ளது.

அதற்கு முன்பாக, மார்ச் மாதம் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்று  ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

Most T20 Centuries: டி20-ல் அதிக சதம்..! கோலியின் சாதனையை சமன் செய்த இளம் வீரர்..!
Abhishek Sharma: டெல்லிக்கு தண்ணி காட்டிய அபிஷேக் சர்மா.. 10 சிக்ஸர்களுடன் செஞ்சுரி..!