
கோவில்பட்டியில் நடைபெற்று வரும் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய வலைகோள் பந்தாட்டப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் பெங்களூரு, ஒடிஸா, செகந்திராபாத் அணிகள் வெற்றிப் பெற்றன.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இலட்சுமியம்மாள் நினைவு கோப்பைக்கான ஒன்பதாவது அகில இந்திய வலைகோள் பந்தாட்டப் போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் நான்காவது நாளான நேற்றுக் காலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், பெங்களூரு இராணுவ லெவன் அணி 7-0 என்ற கோல் கணக்கில் மகாராஷ்டிர காவல் அணியை வீழ்த்தியது
மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில், ஒடிஸா கிழக்கு கடற்கரை இரயில்வே அணி 3-2 என்ற கோல் கணக்கில் ஹாக்கி பெங்களூரு அணியை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில், செகந்திராபாத் தெற்கு மத்திய இரயில்வே அணி 6-2 என்ற கோல் கணக்கில் புதுதில்லி சென்ட்ரல் செக்ரட்டரியேட் அணியை தோற்கடித்தது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.