பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் மோசமாக செயல்பட்டதால் வெற்றி பெற முடியவில்லை - மேக்ஸ்வெல்

 
Published : May 09, 2017, 11:32 AM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் மோசமாக செயல்பட்டதால் வெற்றி பெற முடியவில்லை - மேக்ஸ்வெல்

சுருக்கம்

Bowlers and fielders did not succeed because of poor performance - Maxwell

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் மோசமாக செயல்பட்டதால் வெற்றி பெற முடியவில்லை என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் மேக்ஸ்வெல் தெரிவித்தார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டம் மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 6 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபை வீழ்த்தியது குஜராத்.

இந்த தோல்விக்குப் பிறகு மேக்ஸ்வெல் செய்தியாளர்களைச் சந்தித்து கூறியது:

“இந்தத் தோல்வி எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது. எங்கள் பீல்டிங் மோசமாக அமைந்தது. கேட்சுகளை கோட்டைவிட்டதால் தோற்க நேர்ந்தது. 189 ஓட்டங்கள் என்பது நல்ல ஸ்கோர்தான். ஆனால், பந்துவீச்சாளர்களும், பீல்டர்களும் மோசமாக செயல்பட்டதால் வெற்றி பெற முடியவில்லை. முக்கியமான மூன்று கேட்சுகளை நாங்கள் தவற விட்டுவிட்டோம்” என்ரு வருத்தத்துடன் தெரிவித்தார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா