நடுவருடன் வீண் வாதத்தில் ஈடுபட்ட சந்தீப்புக்கு சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம்…

First Published May 9, 2017, 11:37 AM IST
Highlights
50 per cent of the salary for the prosecution involved in vain argument


பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா, நடுவருடன் வீண் வாதத்தில் ஈடுபட்டதால் அவருடைய போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - குஜராத் மோதின. இது மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சந்தீப் சர்மா தனது மூன்றாவது ஓவரை வீசியபோது ஆடுகளத்தில் பந்துவீசும் பகுதியை நடுவரிடம் தெரிவிக்காமல் மாற்றினார்.

இதனையடுத்து அவர் வீசிய பந்தை நடுவர் நோ-பால் என அறிவித்தார்.

பின்னர், நடுவர், சந்தீப் சர்மா இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.

நடுவரிடம் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் சந்தீப் சர்மாவுக்கு அவருடைய சம்பளத்தில் பாதி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

tags
click me!