
பஞ்சாப் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சந்தீப் சர்மா, நடுவருடன் வீண் வாதத்தில் ஈடுபட்டதால் அவருடைய போட்டி ஊதியத்தில் 50 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 47-ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் - குஜராத் மோதின. இது மொஹாலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் சந்தீப் சர்மா தனது மூன்றாவது ஓவரை வீசியபோது ஆடுகளத்தில் பந்துவீசும் பகுதியை நடுவரிடம் தெரிவிக்காமல் மாற்றினார்.
இதனையடுத்து அவர் வீசிய பந்தை நடுவர் நோ-பால் என அறிவித்தார்.
பின்னர், நடுவர், சந்தீப் சர்மா இடையே பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நடுவரிடம் விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதால் சந்தீப் சர்மாவுக்கு அவருடைய சம்பளத்தில் பாதி அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.