
சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை ஒட்டி தமிழில் டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஹர்பஜன் சிங், நான் வந்துட்டேன்னு சொல்லு, தமிழின் அன்பு உடன் பிறப்பெல்லாம் எப்படி இருக்கீங்க மக்கா ? என தனது மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங். அண்மைக்காலமாக அணியில் இடம் கிடைக்கமால் தவித்து வந்தார். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற்ற ஐ.பி.எல். ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்பஜன் சிங்கை ஏலத்தில் எடுத்தது. இதனால் மிகுந்த உற்சாகமடைந்த அவர், சென்னை அணிக்காக ஐபிஎல் விளையாடவுள்ளதை ஒட்டி டிவிட்டரில் தமிழில் பதிவிட்டுள்ளார்.
நான் வந்துட்டேன்னு சொல்லு! தமிழின் அன்பு உடம்பிறப்பெல்லாம் எப்படி இருக்கீக மக்கா? உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில வீரமா; காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல ஐபிஎல் விளாடப் போறத நெனச்சாலே மெர்சலாகுது;என்றும் தாய் உள்ளம் கொண்ட அன்பு தமிழ்நாடு வாழ்க!!!! என்றும் ட்விட் போட்ட தமிழக மக்களை மெர்சலாக்கி உள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.