டோக்கியோ பாராலிம்பிக்: 50 மீ துப்பாக்கி சுடுதலில் ஒரே பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்தியா..!

Published : Sep 04, 2021, 10:13 AM IST
டோக்கியோ பாராலிம்பிக்: 50 மீ துப்பாக்கி சுடுதலில் ஒரே பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி வென்ற இந்தியா..!

சுருக்கம்

டோக்கியோ பாராலிம்பிக்கில் 50 மீ பிஸ்டல் சுடுதலில் ஒரே பிரிவில் இந்திய வீரர் மனீஷ் நர்வால் தங்க பதக்கத்தையும், சிங்ராஜ் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர்.  

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகளை தொடர்ந்து பாராலிம்பிக் போட்டிகள் நடந்துவருகின்றன. பாராலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு பதக்கங்களை வாரி குவித்துவருகின்றனர்.

இன்று நடந்த 50 மீ பிஸ்டல் சுடுதலில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். 50 மீ பிஸ்டல் ஒரே பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய 2 பதக்கங்களையும் இந்தியா வென்றது.

இந்திய வீரர் மனீஷ் நர்வால் 50 மீ பிஸ்டல் சுடுதலில் தங்க பதக்கத்தையும், மற்றொரு இந்திய வீரரான சிங்ராஜ் வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். 

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா 3 தங்கம், 7 வெள்ளி மற்றும் 5 வெண்கலம் என மொத்தமாக 15 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 34வது இடத்தில் உள்ளது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

யார்க்கர் மன்னன் ஜஸ்பிரித் பும்ரா வரலாற்று சாதனை..! மற்ற பவுலர்கள் நினைச்சு கூட பார்க்க முடியாது!
IND VS SA 1st T20: தென்னாப்பிரிக்காவை வெறும் 74 ரன்னில் சுருட்டி வீசிய இந்தியா.. மெகா வெற்றி!