
ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் இந்தியாவின் காயத்ரி வாகைச் சூடி அசத்தியுள்ளார். இவர் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூனியர் கிராண்ட்ப்ரீ பாட்மிண்டன் போட்டி இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் என இரண்டு பிரிவுகளிலும் இந்திய பாட்மிண்டன் பயிற்சியாளர் கோபிசந்தின் மகள் காயத்ரி வாகைச் சூடி அசத்தியுள்ளார்.
15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் காயத்ரி, சக நாட்டவரான சமியா பரூக்கியை எதிர்கொண்டார்.
இதில், காய்த்ரி 21-11, 18-21, 21-16 என்ற செட் கணக்கில் சமியா பரூக்கியை வீழ்த்தினார்.
அதேபோன்று, 15 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் இரட்டையர் பிரிவின் இறுதிச் சுற்றில் காயத்ரி - சமியா பரூக்கி இணை, இந்தோனேசியாவின் கெல்லி லாரிஸா - ஷெலான்ட்ரி வியோலா இணையுடன் மோதியது.
இதில், இந்திய இணை 21-17, 21-15 என்ற நேர் செட்களில் இந்தோனேசியா இணையைத் தோற்கடித்தது.
காயத்ரி, சமியா ஆகிய இருவரும் கோபிசந்த் அகாதெமியில் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதன்மூலம் கோபிசந்தின் மகள் இரண்டு பிரிவுகளில் வாகைச் சூடி அசத்தியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.