
கோலியின் கேப்டன்சியின் மீது உடனடியாக சந்தேகங்களை எழுப்ப வேண்டிய தேவையில்லை என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று வரலாற்று தோல்வியை சந்திக்காமல் இருந்தாலே போதும் என நினைக்கும் அளவிற்கு இந்திய அணி விளையாடி வருகிறது.
டெஸ்ட் தொடரை இழந்ததற்காக என்பதற்கும் அப்பாற்பட்டு கேப்டன் கோலியின் ஆதிக்கம் மற்றும் அவரது அணுகுமுறை குறித்த விமர்சனங்களும் சந்தேகங்களும் வெகுவாக எழ தொடங்கியுள்ளன.
கேப்டனாக கோலி செய்யும் தவறுகளை யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. முன்பெல்லாம் களத்தில் சீனியர் வீரர்களின் அறிவுரையை கேட்டு கேப்டன்கள் செயல்படுவர். ஆனால் தற்போது அப்படியான சூழலை பார்க்க முடியவில்லை. எனவே கோலியின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கங்குலி, கோலியின் தலைமை பண்பு குறித்து தற்போதே விமர்சிப்பது தவறு. அவர் விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.
இன்னும் கொஞ்ச நாட்களின் கேப்டனாக கோலி நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்துவார் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.