
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவை புஜாரா சோதித்துவிட்டார் என்றே கூறலாம்.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஏற்கனவே 2-0 என தென்னாப்பிரிக்கா கைப்பற்றிவிட்ட நிலையில், மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் நடந்து வருகிறது.
ஆறுதல் வெற்றி பெறும் நோக்கில் இந்திய அணியும், வாஷ் அவுட் செய்யும் நோக்கில் தென்னாப்பிரிக்க அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியின் டாஸை வென்ற இந்திய கேப்டன் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
ஆனால், புஜாராவோ வெகுநேரமாக தென்னாப்பிரிக்காவின் பந்துகளை எதிர்கொள்ள திணறினார். அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது என்பதால் மிகவும் சுதாரிப்பாக இருந்தார் புஜாரா. தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்கள், பெவிலியனுக்கு அருகில் இருந்து ஓடிவந்து பந்துவீச, அசராமல் மிஸ் செய்தே வந்தார் புஜாரா.
என்னதான் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றாலும், இதுபோன்றதொரு தண்டனையை அந்த அணியினர் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.