பெடரேசன் கோப்பை: சென்னை மற்றும் தமிழக அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதி...

Asianet News Tamil  
Published : May 07, 2018, 10:56 AM ISTUpdated : Sep 19, 2018, 02:20 AM IST
பெடரேசன் கோப்பை: சென்னை மற்றும் தமிழக அணிகள் இறுதிசுற்றுக்கு தகுதி...

சுருக்கம்

Federaton cup Chennai and Tamil Nadu qualify for final round ...

பெடரேசன் கோப்பை கூடைப்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு சென்னை ஐஓபி ஆடவர் மற்றும் தமிழக மகளிர் அணிகள் தகுதி பெற்றன.
 
பெடரேசன் கோப்பை போட்டிகள் இந்திய கூடைப்பந்து சம்மேளனம், ஆந்திர மாநில கூடைப்பந்து சங்கம் சார்பில் 32-வது சித்தூரில் நடைபெற்று வருகின்றன. 

இதன் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன. அதில், ஆடவர் அரையிறுதிப் போட்டியில் ஐஓபி அணி மற்றும் கொச்சி சுங்கத்துறை அணி மோதின. 

இதில், 87-74 என்ற புள்ளிக்கணக்கில் ஐஓபி அணி வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

அதேபோன்று, மற்றொரு போட்டியில் ஓஎன்ஜிசி அணி 68-65 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு எம்இஜி அணியை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.
 
மகளிர் பிரிவில் தமிழகம் 82-64 என்ற புள்ளிக்கணக்கில் கிழக்கு ரயில்வேயையும், கேரளம் 60-42 என்ற புள்ளிக்கணக்கில் மகாராஷ்டிரத்தையும் வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறின.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

IND vs NZ 1st ODI: மரண காட்டு காட்டிய விராட் கோலி..! இமாலய இலக்கை ஊதித்தள்ளிய இந்தியா..
நியூசிலாந்து அணியில் வேலூர் இளைஞர்.. ரஜினியின் வெறித்தனமான ரசிகர்.. யார் இந்த ஆதித்யா அசோக்!