
பெடரேசன் கோப்பை கூடைப்பந்து போட்டி இறுதிச் சுற்றுக்கு சென்னை ஐஓபி ஆடவர் மற்றும் தமிழக மகளிர் அணிகள் தகுதி பெற்றன.
பெடரேசன் கோப்பை போட்டிகள் இந்திய கூடைப்பந்து சம்மேளனம், ஆந்திர மாநில கூடைப்பந்து சங்கம் சார்பில் 32-வது சித்தூரில் நடைபெற்று வருகின்றன.
இதன் அரையிறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை இரவு நடைபெற்றன. அதில், ஆடவர் அரையிறுதிப் போட்டியில் ஐஓபி அணி மற்றும் கொச்சி சுங்கத்துறை அணி மோதின.
இதில், 87-74 என்ற புள்ளிக்கணக்கில் ஐஓபி அணி வென்று இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
அதேபோன்று, மற்றொரு போட்டியில் ஓஎன்ஜிசி அணி 68-65 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு எம்இஜி அணியை வென்று இறுதிச் சுற்றில் நுழைந்தது.
மகளிர் பிரிவில் தமிழகம் 82-64 என்ற புள்ளிக்கணக்கில் கிழக்கு ரயில்வேயையும், கேரளம் 60-42 என்ற புள்ளிக்கணக்கில் மகாராஷ்டிரத்தையும் வீழ்த்தி இறுதிசுற்றுக்கு முன்னேறின.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.