
ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா - சீனா அணிகள் இன்று மோதுகின்றன.
ஃபெட் கோப்பை டென்னிஸ் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா - சீனா அணிகள் இன்று மோதும் ஆட்டத்தில் இந்தியாவின் சார்பில் அங்கிதா ரெய்னா, கர்மான் தன்டி கெளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
'ஏ' பிரிவில் இந்தியாவுடன், கஜகஸ்தான், ஹாங்காங், சீனா ஆகிய நாடுகள் இணைந்துள்ளன. கடந்த 1991-க்குப் பிறகு ஃபெட் கோப்பை உலக குரூப் சுற்றுக்கு இந்தியா தகுதி பெறாத நிலையில், பலம் வாய்ந்த அணிகளின் பிரிவில் தற்போதும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் இந்தியாவின் அங்கிதா மற்றும் கர்மான் இருவருமே கடந்த ஆண்டு ஐடிஎஃப் சர்கியூட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.
அங்கிதா தனது முதல் ஆட்டத்தில் உலகின் 120-ஆம் நிலை வீராங்கனையான லின் ஸுவை சந்திக்கிறார். கடந்த ஆண்டு மே மாதம் லுவான் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்தில் லின் ஸுவிடம் தோல்வி கண்டிருந்தார் அங்கிதா.
மற்றொரு இந்திய வீராங்கனையான கர்மான் தன்டி கெளர் முதல் ஆட்டத்தில் உலகின் 125-ஆம் நிலை வீராங்கனையான வாங் யஃபானுடன் களம் காணுகிறார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.