
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது 2-வது ஆட்டத்தில் கோவாவிடம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது தமிழகம்.
விஜய் ஹஸாரே கோப்பை கிரிக்கெட் போட்டிசென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழகம் 48.5 ஓவர்களில் 210 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அடுத்து ஆடிய கோவா 46.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்கள் எடுத்து அசத்தல் வெற்றி கண்டது.
முதலில் டாஸ் வென்று பேட் செய்த தமிழக அணியில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 2 பவுண்டரிகள் உள்பட 52 ஓட்டங்கள், முரளி விஜய் 6 பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் உள்பட 51 ஓட்டங்கள் எடுத்தனர்.
கோவா தரப்பில் தர்ஷன் மிசல், ஸ்ரீனிவாஸ் ஃபட்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் ஆடிய கோவா அணியில் அதிகபட்சமாக ஸ்வப்னில் அஸ்னோத்கர் சதம் கடந்து 9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 103 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்த் ஆடிய கேப்டன் சகுன் காமத் 38 ஓட்டங்கள் எடுத்து வெளியேறே, தர்ஷன் மிசல் 5 ஓட்டங்களுடனும், லக்ஷய் கர்க் ஓட்டங்கள் இன்றியும் அணியை வெற்றிக்கு வழிநடத்தி ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
தமிழக தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 விக்கெட்கள், அஸ்வின் கிறிஸ்ட், ரஹீல் ஷா, விஜய் சங்கர், அபராஜித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன்படி, இந்தப் போட்டியில் கோவாவிடம் தமிழகம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
தமிழகம் தனது அடுத்த ஆட்டத்தில் நாளை மும்பையை எதிர்கொள்கிறது என்பது கொசுறு தகவல்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.