பப்ஜி விளையாட விரும்பிய மகனுக்கு துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்த தந்தை: சீனாவை தோற்கடித்து புதிய உலக சாதனை!

Published : Sep 25, 2023, 12:39 PM ISTUpdated : Sep 25, 2023, 02:20 PM IST
பப்ஜி விளையாட விரும்பிய மகனுக்கு துப்பாக்கி சுட கற்றுக் கொடுத்த தந்தை: சீனாவை தோற்கடித்து புதிய உலக சாதனை!

சுருக்கம்

பப்ஜி விளையாட ஆசைப்பட்ட மகனுக்கு, தந்தை துப்பாக்கி சுட கற்றுக் கொடுக்கவே இன்று ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்று புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டி தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இன்று நடந்த ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் திவ்யான் சிங் பன்வார், ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோர் 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் வென்று அசத்தினர். ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்தவர் திவ்யான்ஷ் சிங் பன்வார். இவர், தனது இரு நண்பர்களான ருத்ரான்க்ஷ் பாலாசாகேப் பாட்டீல், ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் ஆகியோருடன் இணைந்து ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் பிரிவில் போட்டியிட்டார்.

Asian Games 2023: 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் டீம் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது!

இதில், இந்த மூவர் குழுவானது புதிய உலக சாதனையை படைத்துள்ளது. இவர்கள் மூவரும் இணைந்து 1893.7 புள்ளிகள் பெற்று தங்கம் கைப்பற்றினர். இதற்கு முன்னதாக சீனா 1893.3. புள்ளிகள் பெற்று உலக சாதனை படைத்திருந்தது. இந்த உலக சாதனையை முறியடித்து மூவர் குழுவினர் புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

Asian Games 2023: ஆசிய விளையாட்டு போட்டிகள் 2023: ஆண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம்!

இந்த குழு போட்டியில், மூன்று துப்பாக்கி சுடும் வீரர்களும் இணைந்து இந்த சாதனையை முறியடித்துள்ளனர். இந்த மதிப்பெண்களில் ருத்ரன்காஷ் பாட்டீல் 632.5 மதிப்பெண்களும், ஐஸ்வர்யா தோமர் 631.6 மதிப்பெண்களும், திவ்யான்ஷ் பன்வார் 629.6 மதிப்பெண்களும் பெற்றுள்ளனர். ஜெய்ப்பூரில் பிறந்த திவ்யன்ஷ் இதற்கு முன் பல சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். தற்போது சீனாவிலிருந்து ஜெய்ப்பூர் வரையிலும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. மகன் தங்கம் வெல்வார் என்று ஆசையோடு காத்திருக்கும் தந்தைக்கு இது ஒரு இனிப்பான செய்தியாக அமைந்துவிட்டது.

IND vs AUS: விட்டு விட்டு மழை: ஓவர்கள் குறைப்பு: ஆஸ்திரேலியாவிற்கு 317 ரன்கள் வெற்றி இலக்கு!

திவ்யான்ஷின் பெற்றோர் ஜெய்ப்பூர் மருத்துவப் பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இருவரும் ஜெய்ப்பூரில் உள்ள எஸ்எம்எஸ் மருத்துவமனையில் மருத்துவ ஊழியர்கள். ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஷூட்டிங் அகாடமியில் பயிற்சி செய்த திவ்யன்ஷ் அதன் பிறகு பல போட்டிகளில் விளையாடினார். அபினவ் பிந்த்ரா மற்றும் பூர்வி சண்டேலை ஆகியோரை தனது ரோல் மாடலாக கருதிய திவ்யான்ஷ், PUBGயை விரும்பினார். மகனின் இந்த பொழுதுபோக்கைக் கட்டுப்படுத்த, அவனது பெற்றோர் அவருக்கு துப்பாக்கிச் சூடு கற்றுத் தரத் தொடங்கினர். மகனுக்கு துப்பாக்கி சுடுதல் பிடிக்கவே அதன் மூலமாக இப்போது நாடு முழுவதும் பெருமை சேர்த்துள்ளார்.

IND vs AUS: கடைசில ஆட்டம் காட்டிய அபாட்; ஆஸி, 217க்கு ஆல் ரவுட்; தொடரை கைப்பற்றிய டீம் இந்தியா!

 

 

 

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!