டென்மார்க் வீரரை சாய்த்து, காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார் ஜெயராம்…

Asianet News Tamil  
Published : Apr 07, 2017, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
டென்மார்க் வீரரை சாய்த்து, காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார் ஜெயராம்…

சுருக்கம்

Denmark Tilt player Jayaram saw progress to the quarter finals

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் அஜய் ஜெயராம் டென்மார்க் வீரர் விக்டர் ஆக்ஸெல்சனை சாய்த்து காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டார்.

மலேசிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி மலேசியாவின் குச்சிங் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் ஜெயராம் மற்றும் போட்டித் தரவரிசையில் நான்காவது இடத்தில் இருக்கும் டென்மார்க்கின் விக்டர் ஆக்ஸெல்சன் ஆகியோர் மோதினர்,

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 9-21, 21-14, 21-19 என்ற செட் கணக்கில் ஆக்ஸெல்சனை தோற்கடித்து அதிரவைத்தார் ஜெயராம்.

வெற்றிப் பெற்ற ஜெயராம் தனது காலிறுதியில், போட்டித் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் தென் கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோதுகிறார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!
இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் வி.வி.எஸ் லட்சுமணன்?.. பிசிசிஐ சொன்ன முக்கிய அப்டேட்!