ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவிற்கு 2ஆவது தங்கம்! தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சந்து அசத்தல் வெற்றி!

Published : Oct 05, 2023, 01:37 PM IST
ஸ்குவாஷ் பிரிவில் இந்தியாவிற்கு 2ஆவது தங்கம்! தீபிகா பல்லிக்கல், ஹரிந்தர் பால் சந்து அசத்தல் வெற்றி!

சுருக்கம்

ஆசிய விளையாட்டின் தற்போது நடந்து முடிந்த ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து வெற்றி பெற்று தங்கப் பதக்கம் கைப்பற்றினர்.

சீனாவின் ஹாங்சோவில் 19ஆவது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில், இன்று காலை நடந்த பேட்மிண்டன் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார். இந்த நிலையில் தற்போது நடந்து முடிந்த ஸ்குவாஷ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பல்லிக்கல் மற்றும் ஹரிந்தர் பால் சந்து ஜோடி தங்கம் வென்றுள்ளது. மலேசியாவிற்கு எதிராக நடந்த இறுதிப் போட்டியில் 2-0 என்ற கணக்கில் இந்திய ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலமாக ஸ்குவாஷ் போட்டியில் இந்தியா 2ஆவது தங்கம் கைப்பற்றியுள்ளது. 

CWC 2023: கிரிக்கெட் உலகக் கோப்பையில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும் கிரேட் காளி!

இதற்கு முன்னதாக ஸ்வாகுஷ் பிரிவில் போட்டியிட்ட ஆண்கள் அணி பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்றது. இதே போன்று பெண்கள் பிரிவில் இந்திய அணி வெண்கலம் வென்றது. தற்போது வரையில் இந்தியா 20 தங்கம், 31 வெள்ளி மற்றும் 32 வெண்கலம் கைப்பற்றி பதக்கப் பட்டியலில் 83 பதக்கங்களுடன் 4ஆவது இடத்தில் உள்ளது. இன்னும் 3 நாட்கள் உள்ள நிலையில், 100 பதக்கங்கள் கைப்பற்றி இந்தியா நாடு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

England vs New Zealand 1st Match: பென் ஸ்டோக்ஸ் விலகல்? யாரை களமிறக்க போகிறது இங்கிலாந்து?

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!
அலெக்ஸ் கேரியின் அசுர ஆட்டம்.. நிலைகுலைந்த இங்கிலாந்து.. ஆஷஸ் தொடரை வென்று ஆஸி., அசத்தல்!