கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை; காரணம் தெரிஞ்சுக்க இதை வாசியுங்க…

 
Published : Feb 02, 2017, 01:13 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
கிரிக்கெட் வீரருக்கு ஓராண்டு தடை; காரணம் தெரிஞ்சுக்க இதை வாசியுங்க…

சுருக்கம்

தன்னுடைய இருப்பிடம் குறித்த தகவல்களை அளிக்காதததால் மேற்கிந்திய கிரிக்கெட் வீரர் ஆண்ட்ரே ரஸலுக்கு ஒருவருடம் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31, 2017 முதல் ஜனவரி 30, 2018 வரையுள்ள தடைக்காலத்தில் ரஸலால் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது.

இதனால் பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் மற்றும் ஏப்ரலில் நடக்கவுள்ள ஐபிஎல் போட்டி என இரு முக்கியமான போட்டிகளிலும் ரஸலால் பங்கேற்க முடியாது.

ஜமைக்கா ஊக்க மருந்து தடுப்பு ஆணையத்திடம் 2015 ஜனவரி 1, ஜூலை 1, ஜூலை 25 ஆகிய காலகட்டங்களில் தன்னுடைய இருப்பிடம் குறித்த தகவல்களை அளிக்காத குற்றச் சாட்டுக்காக இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

“நான் கிரிக்கெட் போட்டிகளில் மும்முரமாக இருந்ததால், இதுபோன்ற வேலைகளை தன்னுடைய ஏஜெண்டிடம் அளித்துள்ளேன்” என்று ரஸல் விளக்கமளித்தார். ஆனால், ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் அந்த விளக்கத்தை ஏற்கவில்லை என்பதும் நிதர்சணம்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ரோகித், விராட் கோலி ரசிகர்களே ரெடியா? அடுத்த மேட்ச் எப்போது? லைவ் உண்டா?
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பிளேயிங் லெவன்.. சஞ்சு சாஞ்சன் இடத்துக்கு சிக்கல்.. இதுதான் காரணம்!