
பர்மிங்காமில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டிகளின் கடைசி நாளிலும் இந்திய வீரர்கள் பதக்கங்களை குவித்துவருகின்றனர். கடைசி நாளான இன்று பேட்மிண்டனில் பி.வி.சிந்து மற்றும் லக்ஷ்யா சென் ஆகிய இருவரும் தங்கம் வென்றனர். டேபிள் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் சத்தியன் ஞானசேகரன் வெண்கலம் வென்றார்.
அதைத்தொடர்ந்து ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. ஆடவர் இரட்டையர் பேட்மிண்டன் ஃபைனலில் இந்தியாவின் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி, இங்கிலாந்தின் பென் லேன் - சீன் வெண்டி ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை 21-15 என வென்ற இந்திய ஜோடி, 2வது செட்டை 21-13 என வென்று வெற்றி பெற்று தங்கம் வென்றது. இது இந்த காமன்வெல்த்தில் இந்தியாவின் 21வது தங்கம் ஆகும்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.