
சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்களான சிரில் வர்மா, ஸ்ரீ கிருஷ்ண பிரியா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறி அசத்தினர்.
சீன தைபே கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில், சீன தைபேவின் சியா ஹாவ் லீயை எதிர்கொண்டார் சிரில் வர்மா.
இந்த ஆட்டத்தின் முடிவில் சிரில் வர்மா 16-21, 21-17, 21-17 என்ற செட் கணக்கில் சியா ஹாவ் லீயை வென்றார்.
அவர் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மலேசியாவின் லீ ஸீ ஜியாவை சந்திக்கவுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீ கிருஷ்ண பிரியா தனது இரண்டாவது சுற்றில் சியாங் மேய் ஹூயை எதிர்கொண்டார். அதில், 21-17, 20-22, 21-9 என்ற செட் கணக்கில் சியாங் மேய் ஹூயை வீழ்த்தினார் ஸ்ரீ கிருஷ்ண பிரியா.
ஸ்ரீ கிருஷ்ண பிரியா தனது அடுத்த சுற்றில் சீன தைபேவின் ஷுவோ யன் சங் உடன் மோதவுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.