சீன ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால், ஹேலப் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்…

Asianet News Tamil  
Published : Oct 04, 2017, 09:05 AM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
சீன ஓபன் டென்னிஸ்: ரஃபேல் நடால், ஹேலப் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தல்…

சுருக்கம்

Chinese Open Tennis Rafael Nadal Haleb to progress to next round

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் தங்களது பிரிவில் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு அசத்தலாக முன்னேறினர்.

சீன ஓபன் டென்னிஸ் போட்டி சீனாவின் பெய்ஜிங் நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், பிரான்சின் லூகாஸ் புய்லேவுடன் மோதினார்.

இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் நடால் 4-6, 7-6(6), 7-5 என்ற செட் கணக்கில் வெற்றிப் பெற்றார்.

நடால் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ரஷியாவின் காரென் காசாநோவை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் உலகின் 3-ஆம் நிலை வீரரான பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் மற்றும் போஸ்னியாவின் டாமிர் ஸும்ஹூருடன் மோதினார்.

இதில், கிரிகோர் டிமிட்ரோவ் 6-1, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் டாமிர் ஸும்ஹூரை வீழ்த்தி வெற்றி பெற்றார்.

கிரிகோர் டிமிட்ரோவ் தனது 4-வது சுற்றில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்டின் டெல் போட்ரோவை எதிர்கொள்கிறார்.

போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஜான் இஸ்னர் 6-2, 6-3 என்ற செட் கணக்கில் டுனீசியாவின் மாலெக் ஜாஸிரியை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்தச் சுற்றில் அவர் ஆர்ஜென்டீனாவின் லியானார்டோ மேயரை எதிர்கொள்கிறார்.

போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் 6-3, 0-6, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜேர்டு டொனால்ட்சனை வீழ்த்தினார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான ருமேனியாவின் சைமோனா ஹேலப் காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறினார்.

முன்னதாக 3-வது சுற்றில் சைமோனாவை எதிர்கொண்ட ஸ்லோவேகியாவின் மெக்தலினா ரைபரிகோவா காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேற 6-1, 2-1 என்ற செட் கணக்கில் சைமோனா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

சைமோனா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில், ரஷியாவின் மரியா ஷரபோவாவை எதிர்கொள்கிறார்.

உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் ஆண்ட்ரியா பெட்கோவிக்கை வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.

அடுத்த சுற்றில் அவர் ருமேனியாவின் சொரானா சிர்ஸ்டியாவை எதிர்கொள்கிறார்.

போட்டித் தரவரிசையில் 12-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா 6-4, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் வர்வரா லெப்சென்கோவை வென்றார்.

கிவிட்டோவா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான கரோலின் வோஸ்னியாக்கியை சந்திக்கிறார்.

இதனிடையே, போலந்தின் அக்னீஸ்கா ரத்வான்ஸ்கா 7-5, 7-5 என்ற செட் கணக்கில் சீனாவின் ஸாங் ஷுவாயை வீழ்த்தினார்.

செக் குடியரசின் பார்போரா ஸ்டிரைக்கோவா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஜூலியா ஜார்ஜஸை வீழ்த்தினர்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - சீனாவின் பெங் ஷுவாய் இணை தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் டெமி ஷ்ரூஸ் - பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டன்ஸ் இணையை வீழ்த்தியது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

தோனியை ஓவர்டேக் செய்து சஞ்சு சாம்சன் புதிய சாதனை.. சிஎஸ்கே தோற்றாலும் ரசிகர்களுக்கு ஆறுதல்!
யார் கண்ணு பட்டுச்சோ தெரியல.. IPL-ல் விலகும் வைபவ் சூர்யவன்ஷி? ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?