
“நன்றாக விளையாடுங்கள் இளைஞர்களே. எங்களைப் பெருமைப்படுத்துங்கள்” என்று 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் இந்திய கால்பந்து அணிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் வீராட் கோலி.
பதினேழாவது 17 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் வரும் அக்டோபர் 6 முதல் 28 வரை நடைபெறுகிறது.
டெல்லி, கொல்கத்தா, குவாஹாட்டி, நவி மும்பை, மார்கோவா, கொச்சி ஆகிய 6 நகரங்களில் இந்தப் போட்டி நடைபெற இருக்கிறது.
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் முதல்முறையாக களம் காண்கிறது இந்திய அணி.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் கேப்டன் விராட் கோலி, இந்திய கால்பந்து அணி இப்போட்டியில் வெற்றி பெற தன் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
அவர், “நம்முடைய அணி, அமெரிக்காவுடன் முதலில் விளையாடுகிறது. முதல் போட்டிக்கும் இதர போட்டிகளுக்கும் இந்திய அணிக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றாக விளையாடுங்கள் இளைஞர்களே. எங்களைப் பெருமைப்படுத்துங்கள்” என்று கூறியுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.