
மாமல்லபுரத்தில் நடந்துவரும் செஸ் ஒலிம்பியாட் தொடரின் 2வது சுற்றில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். 2வது சுற்றில் இந்திய ஆடவர் பி அணியில் இடம்பெற்று ஆடிய பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன் ஆகிய இருவரும் வெற்றி பெற்றனர்.
பிரக்ஞானந்தா தன்னை எதிர்த்து ஆடிய எஸ்டானியா வீரர் சுகாவின் கிரில்லை 41வது நகர்த்தலில் வீழ்த்தி வெற்றி பெற்றார். ஆடவர் சி பிரிவில் இடம்பெற்று ஆடிய கார்த்திகேயன் முரளியும் வெற்றி பெற்றார். பிரக்ஞானந்தா, அதிபன் பாஸ்கரன், கார்த்திகேயன் முரளி ஆகிய மூவருமே தமிழகத்தை சேர்ந்தவர்கள்.
மகளிர் சி அணியில் இடம்பெற்று ஆடிய சேலத்தை சேர்ந்த நந்திதா 34வது நகர்த்தலில் சிங்கப்பூர் வீராங்கனை என் இம்மானுவேலுவை வீழ்த்தி வெற்றி பெற்றார். சி அணியில் இடம்பெற்று ஆடிய ஈஷா கர்வடேவும் வெற்றி பெற்றார். நந்திதாவும் தமிழகத்தை சேர்ந்தவர்.
பொதுப்பிரிவில் இந்தியா ஆடவர் ஏ அணி மால்டோவா அணியை வீழ்த்தியும், இந்தியா மகளிர் சி அணி சிங்கப்பூர் அணியை வீழ்த்தியும் வெற்றி பெற்றன. இந்தியா ஆடவர் பி மற்றும் மகளிர் பி அணிகளும் எதிரணிகளை வீழ்த்தி வெற்றி பெற்றன.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.