சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னையில் வரும் 12-ஆம் தேதி தொடங்கும் சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில்இந்தியாவின் யூகி பாம்ப்ரி மற்றும் ஆஸ்திரேலியாவின் ஜோர்டான் தாம்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதில் உலகின் 94-ஆம் நிலை வீரரான தாம்சன் போட்டித் தரவரிசையில் முதலிடத்திலும், உலகின் 111-ஆம் நிலை வீரரான பாம்ப்ரி 2-ஆவது இடத்தில் இருப்பதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்பெயினின் மார்செல் கிரானோலர்ஸ் போட்டித் தரவரிசையில் 3-வது இடமும், தென் கொரியாவின் சூன்வூ குவோன் 4-வது இடமும் வழங்கப்படலாம்.
இந்தப் போட்டியில் இதர இந்தியர்களான சாகேத் மைனேனி, சுமித் நாகல், பிரஜனேஷ் கன்னேஸ்வரன் ஆகியோர் பிரதான சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளனர். அவர்கள் தவிர, மேலும் 4 இந்தியர்களுக்கு வைல்டு கார்டு வாய்ப்பு மூலம் நேரடி பிரதான சுற்று வாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
இப்போட்டிக்கான தகுதிச்சுற்றுகள் வரும் 10-ஆம் தேதி தொடங்குகிறது. இறுதி ஆட்டம் 17-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.