சென்னையின் அணி சாம்பியன் வெல்ல காரணமான 8 வீரர்கள் நீக்கம்...

 
Published : Jun 02, 2018, 01:43 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
சென்னையின் அணி சாம்பியன் வெல்ல காரணமான 8 வீரர்கள் நீக்கம்...

சுருக்கம்

Chennai fc team 8 players removed from team

ஐஎஸ்எல்-ன் நடப்புச் சாம்பியனான சென்னையின் அணியை சேர்ந்த எட்டு வீரர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.  

கடந்த இந்திய சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) சீசனில் சென்னையின் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அப்போது அதில் இடம் பெற்றிருந்த எட்டு வீரர்கள் தற்போது நீக்கப்பட்டுள்ளனர்.
 
நீண்ட காலமாக சென்னையின் அணியில் விளையாடும் தனசந்திரா சிங், பிக்ரம்ஜித் சிங், கீனன் அல்மெடா, ஜூட் நோரோ, புல்கான்சோ கார்டோசா, சஞ்சய் பால்முச், பவன்குமார், ஷாகின் லா உள்ளிட்ட 8 வீரர்களின் ஒப்பந்தங்கள் முடிவுக்கு வந்தன. 

எனினும், கடந்த சீசனில் ஆடிய 13 வீரர்களை சென்னையின் அணி தக்க வைத்துள்ளது.  தலைமை பயிற்சியாளர் ஜான் கிரேகோரி, விளையாட்டு நிபுணர் நீயல் கிளார்க் ஆகியோரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

வரும் 2019-ல் நடைபெறும் ஏஎப்சி கோப்பைக்கான போட்டியில் சென்னையின் அணி விளையாட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

முதல் T20: ஜெமிமா ருத்ரதாண்டவம்.. கைகொடுத்த ஸ்மிருதி மந்தனா.. இலங்கையை பந்தாடிய இந்தியா!
U19 ஆசிய கோப்பையை தட்டித் தூக்கியது பாகிஸ்தான்! 191 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி!