
ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமையை சேவாக்குடன் ராஜஸ்தான் வீரர் பட்லர் பகிர்ந்துகொள்கிறார்.
நடந்துவரும் ஐபிஎல் 11வது சீசனில் ராஜஸ்தான் அணிக்காக ஆடிவரும் ஜோஸ் பட்லர், முதல் 7ஆட்டங்களில் நடு வரிசையில் இறக்கப்பட்டார். நடுவரிசையில் சோபிக்காத பட்லர், டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தொடக்க வீரராக களமிறக்கப்பட்டார். அந்த போட்டியில் 67 ரன்கள் குவித்தார். அதன்பிறகு பஞ்சாப்புடன் நடந்த அடுத்தடுத்த இரண்டு போட்டிகளிலும் அரைசதம் அடித்து மிரட்டினார்.
அதன்பிறகு சென்னைக்கு எதிரான போட்டியில் 95 நாட் அவுட், மும்பைக்கு எதிரான போட்டியில் 94 நாட் அவுட் என எதிரணிகளை பட்லர் மிரட்டிவருகிறார். மிகச்சிறந்த ஃபார்மில் இருக்கும் பட்லர், தொடர்ச்சியாக 5 அரைசதங்களை அடித்து எதிரணிகளை மிரட்சியடைய செய்துள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக ஐந்து அரைசதங்களை இதற்கு முன்னதாக சேவாக் மட்டும்தான் அடித்துள்ளார். தற்போது சேவாக்குடன் பட்லரும் இணைந்துள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.