மும்பைக்கு எதிரான போட்டியில் ரஹானே செய்த செயல்!! அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

Asianet News Tamil  
Published : May 14, 2018, 02:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
மும்பைக்கு எதிரான போட்டியில் ரஹானே செய்த செயல்!! அபராதம் விதித்த ஐபிஎல் நிர்வாகம்

சுருக்கம்

rahane fined rupees twelwe lakhs

மும்பைக்கு எதிரான போட்டியில் பந்துவீச அதிக நேரம் எடுத்து கொண்டதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரஹானேவிற்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணியும் ராஜஸ்தான் அணியும் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் ரஹானே முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார்.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது. 169 ரன்கள் இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி, பட்லரின் அதிரடியான அபார பேட்டிங்கால் 18 ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.

இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை ராஜஸ்தான் அணி தக்கவைத்துள்ளது. 

இந்த போட்டியில் மும்பை அணிக்கு பந்துவீச அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தை ராஜஸ்தான் அணி எடுத்துக்கொண்டது. ஐபிஎல் விதிகளின் படி பந்துவீச அதிகநேரம் எடுக்கக்கூடாது. எனவே அந்த அணியின் கேப்டன் ரஹானேவிற்கு 12 லட்சம் ரூபாயை ஐபிஎல் நிர்வாகம் அபராதமாக விதித்துள்ளது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஹர்திக், பும்ரா இல்லாமல் நியூசிலாந்துடன் மோதும் இந்தியா: 3 சிக்கல்கள்
5வது T20 போட்டியிலும் இந்தியா அசத்தல் வெற்றி.. இலங்கையை ஒயிட்வாஷ் செய்து சிங்கப்பெண்கள் மாஸ்!