
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிச், ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவ் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த உலகின் 24-ஆம் நிலை வீரரான ரயோனிச்சை, உலகின் 208-ஆம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதி அதில் 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
காயம் காரணமாக கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போட்டிகளில் பங்கேற்காத ரயோனிச், பிரிஸ்பேன் போட்டியிலிருந்து இந்த சீசனை தொடங்கினார். எனினும், மினாருக்கு எதிரான ஆட்டத்தில் கடுமையாகப் போராடி அவர் வீழ்ந்தார்.
முதல் செட்டில் ஒரு முறையும், 2-ஆவது செட்டில் இரு முறையும் ரயோனிச்சின் சர்வ்களை பிரேக் செய்தார் மினார். இறுதியில் அவரே வெற்றப் பெற்று அசத்தினார்.
இதேபோல, போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருந்த உலகின் 33-ஆம் நிலை வீரரான ஜெர்மனியின் மிஸ்கா ஸ்வெரேவை 6-2, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் உலகின் 175-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் மைக்கெல் மோஹ்.
இதனிடையே, போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸ், சகநாட்டவரான மேத்யூ எப்டனை 6-7(3/7), 7-6(7/5), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதில் அவர், உக்ரைனின் அலெக்ஸாண்டர் டோல்கோபோலோவை எதிர்கொள்கிறார்.
பிரிஸ்பேன் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில், உலகின் 4-ஆம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.