பாம்ப்ரிக்கு இரண்டாவது சுற்றிலும் வெற்றி…

Asianet News Tamil  
Published : Jan 13, 2017, 12:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:58 AM IST
பாம்ப்ரிக்கு இரண்டாவது சுற்றிலும் வெற்றி…

சுருக்கம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி இரம்ண்டாவது வெற்றியைப் பெற்றுள்ளார். 3-ஆவது சுற்று ஆட்டத்தில் வெல்லும் பட்சத்தில் பிரதான சுற்றில் விளையாட தகுதி பெற்று விடுவார்.

ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் வரும் திங்கள்கிழமை மெல்போர்னில் தொடங்குகிறது. இந்தப் போட்டிக்கான தகுதிச்சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் இந்தியாவின் யூகி பாம்பரி தனது 2-ஆவது சுற்றில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் செர்பியாவின் பெட்ஜா கிறிஸ்டினை தோற்கடித்தார்.

2009-இல் ஜூனியர் ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்றவரான யூகி பாம்ப்ரி, தனது 3-ஆவது தகுதிச்சுற்றில் அமெரிக்காவின் எர்னெஸ்டோ எஸ்கோபீடோவை சந்திக்கிறார்.

3-ஆவது சுற்றுக்கு முன்னேறியிருப்பது குறித்து யூகி பாம்ப்ரி, “இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடினேன். எனக்கு கிடைத்திருக்கும் மற்றொரு நல்ல வெற்றி இது. மிகச்சிறப்பாக சர்வீஸ் அடித்ததோடு, முக்கியமான நேரத்தில் பெட்ஜாவின் சர்வீஸை முறியடித்தேன். அதுதான் எனக்கு வெற்றி தேடித்தந்தது. 3-ஆவது சுற்று ஆட்டம் எனக்கு மிகுந்த சவாலாக இருக்கும். ஆட்டம் எப்படி போகிறது என்று பார்க்கலாம்” என்று கூறினார்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்
2 நாளில் முடிந்த ஆஷஸ் டெஸ்ட் போட்டி.. ஒரே நாளில் 20 விக்கெட்.. மெல்போர்ன் பிட்ச் கியூரேட்டர் விளக்கம்!