
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவுக்கு "வைல்ட் கார்ட்' வழங்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 15-ஆம் தேதி தொடங்குகிறது.
டென்னிஸில் மிக முக்கியமான போட்டிகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டி கருதப்படுகிறது.
இந்தப் போட்டியில், பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அஸரென்காவுக்கு "வைல்ட் கார்ட்' அளிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர் நேரடியாக பிரதான சுற்றில் பங்கேற்க முடியும்.
இதுகுறித்து அஸரென்கா கூறியது:
"ஆஸ்திரேலியா ஓபன் சாம்பியன்ஷிப் பட்டத்தை ஏற்கெனவே இரண்டு முறை கைப்பற்றியிருக்கிறேன்.
அடுத்தாண்டின் தொடக்கத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் பங்கேற்பதை ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் காத்திருக்கிறேன்' என்று ஆர்வமுடன் தெரிவித்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.