மைதானத்தில் கிரிக்கெட் ஆடிய தேனீக்கள் : தரையில் படுத்துக்கொண்ட வீரர்கள்!

 
Published : Feb 05, 2017, 12:33 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
மைதானத்தில் கிரிக்கெட் ஆடிய தேனீக்கள் : தரையில் படுத்துக்கொண்ட வீரர்கள்!

சுருக்கம்

ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா – இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது, தேனீக்கள் மைதானத்திற்குள் புகுந்ததால்,  பீதியடைந்த வீரர்களும், நடுவர்களும் தரையில் படுத்துக் கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டனர்.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  இலங்கை அணி, மூன்று டெஸ்ட், மூன்று டி20 மற்றும் 5 ஒருநாள் பாேட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. ஏற்கெனவே நடந்து முடிந்த டெஸ்ட் தாெடாில் தென் ஆப்பிரிக்க அணியும், டி20 தொடரில் இலங்கை அணியும் கோப்பையை வென்றுள்ளன. 

இதனைத் தொடா்ந்து 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில், இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன. தொடா்ந்து 2 ஒருநாள் போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று, தொடரில் முன்னிலையில் இருக்கும் நிலையில், 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்றது.

பாேட்டியின் 24வது ஓவரில் இலங்கை அணி விளையாடிக் கொண்டிருந்தபோது, மைதானத்திற்குள் ஆயிரக்கணக்கான தேனீக்கள் திடீரென புகுந்தன. ஹெல்மெட் உள்ளிட்ட உபகரணங்களை அவைகள் சூழ்ந்து கொண்டன.

இதனால் பீதியடைந்த வீரர்களும், நடுவர்களும் தரையில் படுத்துக் கொண்டு தங்களை தற்காத்துக் கொண்டனர். தீயணைப்புக் கருவிகளைக் கொண்டு மைதானத்தில் இருந்த தேனீக்கள் விரட்டப்பட்டன. இதையடுத்து ஓவர்கள் குறைப்பின்றி ஒருமணிநேரம் தாமதமாக போட்டி மீண்டும் தொடங்கியது. இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

விஜய் ஹசாரே டிராபியில் கோலி மிரட்டல் சதம்.. 16000 ரன்களை கடந்து புதிய சாதனை
'பும்ரா, ரிஷப் பண்ட் என்னிடம் மன்னிப்பு கேட்டனர்'.. உருவக் கேலி குறித்து மனம் திறந்த பவுமா..!