பிசிசிஐ ஜூனியர் அணி தேர்வுக் குழுவில் முன்னாள் இந்திய வீரருக்கு இடம்...

Asianet News Tamil  
Published : Apr 04, 2018, 10:50 AM ISTUpdated : Sep 19, 2018, 02:12 AM IST
பிசிசிஐ ஜூனியர் அணி தேர்வுக் குழுவில் முன்னாள் இந்திய வீரருக்கு இடம்...

சுருக்கம்

BCCI Junior team selection committee former indian player joined

   
பிசிசிஐ ஜூனியர் அணி தேர்வுக் குழுவில் முன்னாள் இந்திய வீரரான ஆசீஷ் கபூருக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் அணியை தேர்வு செய்வதற்காக மூன்று நபர்கள் கொண்ட குழுவை பிசிசிஐ அமைத்துள்ளது. 

இந்தக் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் இடம் பெற்றிருந்தார். இதற்கிடையே 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை போட்டியில் இந்தியா வாகை சூடியது. 

அதனையடுத்து அடுத்து அவர் தனது பதவியை விட்டு விலகி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 

அவரது ராஜிநாமாவால் ஏற்பட்ட காலியிடத்துக்கு முன்னாள் இந்திய வீரர் ஆசீஷ் கபூர் நியமிக்கப்பட்டுள்ளார். கபூர் 4 டெஸ்ட்டுகள், 17 ஒருநாள் போட்டிகளில் நாட்டுக்காக விளையாடினார். 

இந்தக் குழுவின் இதர உறுப்பினர்கள் ஞானேந்திரா பாண்டே, ராகேஷ் பாரீக் ஆகியோர் ஆவர்.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

T20 World Cup: 2 சூப்பர் ஓவர்.. கடைசி வரை திக் திக் திக்.. SA-விடம் போராடி வீழ்ந்த ஆப்கானிஸ்தான்!
ICCயின் மிரட்டலுக்கு பயந்துட்டோமா..? எங்கள் ராணுவ தளபதி முனீர் யாருனு தெரியும்ல..? PCB தலைவர் பரபரப்பு கருத்து