பந்துவீச்சுப் பயிற்சியாளரான பாலாஜிக்கு ரூ.50 இலட்சம் வழங்கியது பிசிசிஐ. ஏன்?

Asianet News Tamil  
Published : Nov 09, 2017, 09:53 AM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
பந்துவீச்சுப் பயிற்சியாளரான பாலாஜிக்கு ரூ.50 இலட்சம் வழங்கியது பிசிசிஐ. ஏன்?

சுருக்கம்

BCCI has granted Rs 50 lakh to bowling coach Balaji Why?

இந்திய அணிக்காக விளையாடிய இலட்சுமிபதி பாலாஜியின் கோரிக்கையை ஏற்று பிசிசிஐ ரூ.50 இலட்சம் வழங்கியுள்ளது. 

இந்திய அணிக்காக 2003- 04-ஆம் ஆண்டுக்கு முன்பு விளையாடத் தொடங்கிய முன்னாள் வீரர்களுக்கு பிசிசிஐ நிதியுதவி அளித்து வருகிறது. பிசிசிஐ முன்னாள் தலைவர் என்.சீனிவாசனால் 2012-ல் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டது.

குறைந்தபட்சம் 10 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள முன்னாள் வீரர்களுக்கு இத்திட்டத்தால் பலன் கிடைக்கும்.

இதனையடுத்து எட்டு டெஸ்டுகள், 30 ஒருநாள், ஐந்து டி20 போட்டிகளில் விளையாடியுள்ள  இலட்சுமிபதி பாலாஜிக்கு ரூ.50 இலட்சத்தை வழங்கியுள்ளது பிசிசிஐ.

இதுகுறித்து பாலாஜி கூறியது:

“என் கோரிக்கையை பிசிசிஐக்கு அனுப்பிய தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு நன்றி. கோரிக்கை வைத்த ஒரு மாதத்திற்குள் எனக்குப் பணம் கிடைத்துவிட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு ரஞ்சி அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பாலாஜி, தற்போது பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

WPL 2026: ஆர்சிபி ரசிகர்கள் ஷாக்.. ஸ்டார் வீராங்கனை திடீர் விலகல்.. டெல்லியிலும் முக்கிய மாற்றம்!
டி20 உலகக் கோப்பை.. ஸ்ட்ராங் டீமை களம் இறக்கும் இங்கிலாந்து.. ஆர்ச்சர் ரிட்டன்..!