
உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
உலகக் கோப்பை சாட்டிலைட் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் ஐஸ்லாந்தில் நடைபெற்றது.
இதன் இறுதிச்சுற்றில் அமெரிக்காவின் அலெக்ஸிஸ் பிரவுனை, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்தப் போட்டியில் 10-15 என்ற புள்ளிகள் கணக்கில் அலெக்ஸிஸ் பிரவுனிடம் வீழ்ந்தார் பவானி.
முன்னதாக பவானி தேவி காலிறுதியில் வெனிசூலா நாட்டின் பாரேட் டாரûஸ 15-9 என்ற புள்ளிகள் கணக்கிலும், அரையிறுதியில் இத்தாலியின் கிலா அர்பினோவை 15-10 என்ற புள்ளிகள் கணக்கிலும் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பவானி தேவி கடந்த ஆண்டு இதே போட்டியில் தங்கப் பதக்கம் வென்றிருந்தது கூடுதல் தகவல். சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பவானி தேவி பெற்றுள்ளார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.