
குன்மிங் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பிரஜனேஷ் கன்னேஸ்வன் முதல்முறையாக சேலஞ்சர் பட்டம் வென்று அசத்தினார்.
குன்மிங் ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி சீனாவின் அன்னிங் நகரில் நடைபெற்றது.
இந்தப் போட்டியின் இறுதிச்சுற்றில், உலகின் 260-ஆம் நிலை வீரரான பிரஜனேஷ் - உலகின் 229-ஆம் நிலை வீரரான எகிப்தின் முகமது சஃப்வத்தை சந்தித்தார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பிரஜனேஷ் 5-7, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலமாக 125 தரவரிசை புள்ளிகள் பெற்ற பிரஜனேஷ், இன்று வெளியாகும் புதிய தரவரிசையின்போது உலகின் முதல் 200 இடங்களுக்குள்ளாக முன்னேறுவார். அவர் 175-வது இடத்துக்கு வர வாய்ப்புகள் அதிகம்.
அதேபோன்று ஒற்றையர் தரவரிசையில் இதுவரை யூகி பாம்ப்ரி 83-வது இடத்திலும், ராம்குமார் ராமநாதன் 115-வது இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சேலஞ்சர் போட்டிகளில் பிரஜனேஷ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது இது 2-வது முறையாகும். முன்னதாக, கடந்த 2016-இல் புணேயில் நடைபெற்ற போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி, அதில் வீழ்ந்திருந்தார்.
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.