ஆக்லாந்து ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் கால் பதித்த இந்திய வீரர்கள் இவர்கள்தான்...

 
Published : May 04, 2018, 11:28 AM ISTUpdated : Sep 19, 2018, 02:19 AM IST
ஆக்லாந்து ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் கால் பதித்த இந்திய வீரர்கள் இவர்கள்தான்...

சுருக்கம்

Auckland Open Badminton Indian players in quarterfinals

ஆக்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய் பிரணீத், சமீர் வர்மா மற்றும் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை காலிறுதிக்கு முன்னேறி அசத்தினர்.

ஆக்லாந்து ஓபன் பாட்மிண்டன் போட்டி நியூஸிலாந்தில் நடைபெறுகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்று ஒன்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் சாய் பிரணீத் டேரன் லியூவுடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 21-18, 21-7 என்ற செட் கணக்கில் டேரன் லியூவை வீழ்த்தினார் சாய் பிரணீத். காலிறுதியில் சாய் பிரணீத், இலங்கையின் நிலுகா கருணாரத்னேவை சந்திக்கிறார்.

அதேபோன்று, போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சமீர் வர்மா 21-17, 21-19 என்ற செட்களில் ஹாங் காங்கின் செயுக் யு லீயை வீழ்த்தினார். காலிறுதியில் சமீர் வர்மா, சீனாவின் லின் டானுடன் மோதுகிறார்.

மற்றொரு பிரிவான ஆடவர் இரட்டையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை 21-9, 21-12 என்ற செட்களில் தாய்லாந்தின் பாகின் குனா அனுவிட் - நாதாபட் டிரின்காஜீ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?