விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

Published : Aug 18, 2023, 03:38 PM IST
விஸ்வநாதன் ஆனந்திற்கு பிறகு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா!

சுருக்கம்

உலகக் கோப்பை செஸ் போட்டியின் அரையிறுதிக்கு இந்திய வீரர் ஆர் பிரக்ஞானந்தா முன்னேறியுள்ளார்.

அசர்பைஜான் நாட்டிலுள்ள பெக்கு நகரில் உலகக் கோப்பை செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் ஜூலை 30ஆம் தேதி தொடங்கிய இந்த உலகக் கோப்பை தொடரானது வரும் 24 ஆம் தேதி வரையில் நடக்கிறது. இந்த தொடரில் மட்டும் அபிமன்யு புராணிக், எஸ்.எல்.நாராயணன், அர்ஜுன் எரிகைசி, விதித் சந்தோஷ் குஜராத்தி, குகேஷ் டி, அதீபன் பாஸ்கரன், கார்த்திக் வெங்கட்ராமண் ஆகியோர் உள்பட 206 விளையாட்டு வீரர்கள் இடம் பெற்று விளையாடி வருகின்றனர்.

IRE vs IND 1st T20:அயர்லாந்துக்கு அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் யாருக்கு வாய்ப்பு? டீம் எப்படி அமையும்?

உலகக் கோப்பை செஸ் தொடரின் கால் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி மற்றும் தமிழக வீரர் ஆர் பிரக்ஞானந்தா மோதினர். இதில், பிரக்ஞானந்தா வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அதுமட்டுமின்றி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய 2ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை பிரக்ஞானந்தா படைத்தார். அடுத்து நடக்க உள்ள அரையிறுதிப் போட்டியில் உலகின் 3ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் பேபியானோ கருணா மற்றும் பிரக்ஞானந்தா மோதுகின்றனர். இன்று எந்தப் போட்டியும் நடைபெறவில்லை. நாளை முதல் 24 ஆம் தேதி வரையில் கடைசி ரவுண்ட் போட்டிகள் நடைபெறுகிறது.

Asia Cup 2023: ஆசிய கோப்பை 2023: இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் பலப்பரீட்சை!

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
click me!

Recommended Stories

3 பார்மேட்டிலும் சதம்.. புதிய வரலாறு படைத்த யஷஸ்வி ஜெய்ஸ்வால், 6வது இந்தியர் ஆனார்
Ind Vs SA: இந்திய அணி மிரட்டல் அடி..! இமாலய வெற்றி.. தொடரை கைப்பற்றி அசத்தல்..