மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார் சுஷில் குமார்...

 
Published : Nov 13, 2017, 10:41 AM ISTUpdated : Sep 19, 2018, 01:26 AM IST
மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார் சுஷில் குமார்...

சுருக்கம்

after three years sushil kumar partcipating in national wrestling championship

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க போகிறேன் என்று இந்திய வீரர் சுஷில் குமார் தெரிவித்துள்ளார்.

டிபிலிஸி, ஜார்ஜியா உள்ளிட்ட நாடுகளில் பயிற்சி மேற்கொண்டிருந்த சுஷில் குமார் இதற்காக இந்தியா திரும்பியுள்ளார். அத்துடன் 74 கிலோ எடைப் பிரிவுக்கான தேர்வுப் போட்டியில் தேசிய ஜூனியர் சாம்பியன் தினேஷை வீழ்த்தி தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, "உடல் மற்றும் மனதளவில் தற்போது முழுதகுதியுடன் இருக்கும் நான், போட்டிகளில் திருப்தியுடன் பங்கேற்று வருகிறேன்' என்றார் சுஷில் குமார் .
இதனிடையே, 74 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கும் மற்றொரு வீரரான பிரவீண் ராணா, தேர்வுப் போட்டியில் பங்கேற்கவில்லை. இந்நிலையில், தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் தான் பங்கேற்கவில்லை என்று யோகேஷ்வர் தத் தெரிவித்துள்ளார்.

எனினும், இப்போட்டியில் ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற சாக்ஷி மாலிக், கீதா போகத், வினேஷ் போகத் ஆகியோர் பங்கேற்கின்றனர் என்பது கொசுறு தகவல்.

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

ஓவராக குடித்து மட்டையான இங்கிலாந்து வீரர்கள்! ஆஷஸ் தோல்விக்கு காரணம் இப்பதான் புரியுது!
20 வயதில் டி20 உலகக்கோப்பை வெற்றி; அதுவே தொடர் வெற்றிக்கு நம்பிக்கை தந்தது: ரோஹித் சர்மா