45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரி நாட்டில் நடக்கிறது..! செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு

Published : Aug 09, 2022, 10:20 PM IST
45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரி நாட்டில் நடக்கிறது..! செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரியிடம் ஒப்படைப்பு

சுருக்கம்

44வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில், 45வது செஸ் ஒலிம்பியாட் ஹங்கேரி நாட்டில் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டதுடன், செஸ் மரபுப்படி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி ஹங்கேரி நாட்டிடம் ஒப்படைக்கப்பட்டது.  

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்து, செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கிறது தமிழக அரசு.

186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளுக்கும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அவரவர் நாட்டு உணவுகளை சமைத்து கொடுத்து சிறப்பாக உபசரித்து, சர்வதேசத்தையே வியக்கவைத்தது தமிழக அரசு.

சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தமிழக அரசின் ஏற்பாடுகளையும், உபசரிப்பையும் மெச்சினர். உலகமே தமிழகத்தை வியந்து பார்த்தது.

இன்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தொடக்க விழாவை போலவே நிறைவு விழாவையும் மிக பிரம்மாண்டமாக சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடத்தி முடித்தது தமிழக அரசு.

செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா முடியும்போது, 45வது செஸ் ஒலிம்பியாட்டை நடத்துவது ஹங்கேரி நாடு என்று அறிவிக்கப்பட்டு, செஸ் மரபுப்படி, சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கொடி  ஹங்கேரியிடம் வழங்கப்பட்டது.
 

PREV

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

click me!

Recommended Stories

டி20 ரேங்கில் அபிஷேக் சர்மா ராஜ்ஜியம்.. முதலிடத்தை இழந்த 'மிஸ்டரி' ஸ்பின்னர்.. பும்ரா ரேங்க் என்ன?
ஐபிஎல் திருவிழா வந்தாச்சு.. போட்டிகள் அட்டவணை, சிஎஸ்கே மேட்ச் முழு லிஸ்ட் இதோ!