ரோஹித், பாபர்லாம் சூப்பர் பேட்ஸ்மேன்கள் தான்.. ஆனால் பந்துவீச பயந்த ஒரே பேட்ஸ்மேன் அவர் தான் - வஹாப் ரியாஸ்

By karthikeyan VFirst Published Dec 14, 2021, 6:25 PM IST
Highlights

வஹாப் ரியாஸ், தான் பந்துவீச பயந்த பேட்ஸ்மேன் யார் என்று கூறியுள்ளார்.
 

சர்வதேச கிரிக்கெட்டில் ஃபாஸ்ட் பவுலர்களுக்கு பெயர்போன பாகிஸ்தான் அணியின் சிறந்த ஃபாஸ்ட் பவுலர்களில் ஒருவர் வஹாப் ரியாஸ்.  2008ம் ஆண்டிலிருந்து பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடிவரும் வஹாப் ரியாஸ், 27 டெஸ்ட் மற்றும் 91 ஒருநாள் போட்டிகளில் ஆடி முறையே 83 மற்றும் 121 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பாகிஸ்தான் அணியின் சீனியர் ஃபாஸ்ட் பவுலரான வஹாப் ரியாஸ், இலங்கையில் நடக்கும் லங்கா பிரீமியர் லீக் தொடரில் ஜாஃப்னா கிங்ஸ் அணிக்காக ஆடுகிறார்.

இந்நிலையில், ஃபாஸ்ட் பவுலரான வஹாப் ரியாஸ் யாருக்கு பந்துவீசுவது கடினம் என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய வஹாப் ரியாஸ், ரோஹித் சர்மா, பாபர் அசாம் மாதிரி சிறந்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆனால் பந்துவீசவே நான் பயப்பட்ட ஒரு வீரர் இருக்கிறார். ஏபி டிவில்லியர்ஸ் தான் அது. நான் அடுத்ததாக என்ன பந்து வீசப்போகிறேன் என்று அவருக்கு நன்றாகவே தெரியும். ஆட்டத்தை மிகச்சரியாக ரீட் செய்யக்கூடியவர் அவர். என் பவுலிங்கை எப்போதுமே சிறப்பாக ஆடிய வீரர் டிவில்லியர்ஸ் என்று வஹாப் ரியாஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.

மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பந்தை பறக்கவிடக்கூடிய வீரர் என்பதால் ரசிகர்களால் மிஸ்டர் 360 என அன்புடன் அழைக்கப்படும் டிவில்லியர்ஸ், சர்வதேச ஃபாஸ்ட் பவுலர்கள், ஸ்பின்னர்கள் பலரை தெறிக்கவிட்டார். உலகத்தரம் வாய்ந்த மிகச்சிறந்த பவுலர்கள் கூட டிவில்லியர்ஸுக்கு பந்துவீச பயப்படுவார்கள்.
 

click me!