இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது 24 கேரட் கோல்டு ஐ போனை காணவில்லை – நடிகை காவல் நிலையத்தில் புகார்!

Published : Oct 16, 2023, 11:38 AM IST
இந்தியா – பாகிஸ்தான் போட்டியின் போது 24 கேரட் கோல்டு ஐ போனை காணவில்லை – நடிகை காவல் நிலையத்தில் புகார்!

சுருக்கம்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியின் போது தனது 24 கேரட் கோல்டு ஐபோனை தொலைத்துவிட்டதாக பிரபல நடிகையான ஊர்வசி ரவுடேலா, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12ஆவது லீக் போட்டி கடந்த 14 ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் ஆடிய இந்தியா ரோகித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயரின் அதிரடியால் இலக்கை எட்டி பாகிஸ்தானுக்கு எதிராக தொடர்ந்து 8ஆவது முறையாக வெற்றி பெற்றது.

AFG vs ENG:ஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மட்டுமே மகிழ்ச்சி: சோகத்திலும் வெற்றியை கொண்டாடிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்

இந்த நிலையில் தான் பிரபல நடிகையாக ஊர்வசி ரவுடேலா அகமதாபாத் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது தனது 24 கேரட் கோல்டு ஐபோனை தொலைத்துவிட்டதாகவும், கண்டுபிடித்து தரும்படியும் கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளத்திலும் அனைவரது உதவியையும் நாடியுள்ளார்.

ஆசிய விளையாட்டு.. பதக்கம் வென்ற கூலித் தொழிலாளி ராம் - ஸ்வீட் ஷாக் கொடுத்த மஹிந்திரா நிறுவன தலைவர்! என்ன அது?

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் எனது 24 காரட் கோல்டு ஐ போனை தொலைத்துவிட்டேன், யாரேனும் கண்டால் உதவி செய்யுங்கள். விரைவில் என்னை தொடர்பு கொள்ளவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

 

 

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

தென்னாப்பிரிக்கா டி20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா படைக்க போகும் 'மெகா' இரட்டை சாதனை!
இந்திய அணி கேப்டன் கே.எல்.ராகுல், வீரர்களுக்கு அபராதம்.. ஐசிசி அதிரடி.. என்ன காரணம்?