ரிஷப் பண்ட்டின் பிறந்தநாளுக்கு ஃப்ளையிங் கிஸ்ஸுடன் வாழ்த்து கூறிய ஊர்வசி ரவுத்தேலா

By karthikeyan VFirst Published Oct 4, 2022, 11:10 PM IST
Highlights

ரிஷப் பண்ட்டின் பிறந்தநாளுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து நடிகை ஊர்வசி ரவுத்தேலா கூறிய வாழ்த்து இண்டர்நெட்டில் டிரெண்டானது.
 

இந்திய அணியின் முக்கியமான வீரராக வளர்ந்துள்ளார் ரிஷப் பண்ட். தோனிக்கு அடுத்து இந்திய அணியின் விக்கெட் கீப்பர் என்ற இடத்தை பிடித்த ரிஷப் பண்ட் அணியில் முக்கியமான வீரராக உருவெடுத்துள்ளார். டி20 உலக கோப்பையில் ஆடும் லெவனில் தனக்கான நிரந்தர இடத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் ரிஷப் பண்ட்டுக்கு அக்டோபர் 4ம் தேதி 25வது பிறந்தநாள். 

ரிஷப்பின் பிறந்தநாளுக்கு அவரது முன்னாள் காதலியான பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா பிறந்தநாள் வாழ்த்து கூறியது டிரெண்டானது. அண்மையில் ரிஷப் பண்ட் - ஊர்வசி ரவுத்தேலா இடையே கடும் மோதல் மூண்டது. சமூக வலைதளங்களில் இவர்களது மோதல் பற்றி எரிந்தது. 

இதையும் படிங்க - கடைசி டி20 போட்டியில் இந்தியாவை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஆறுதல் வெற்றி.. ஆனால் அபார வெற்றி

கடந்த 2018ம் ஆண்டே ரிஷப் பண்ட் - ஊர்வசி ரவுத்தேலா இடையே காதல் என்று கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின்னர் அதைப்பற்றி பேசப்படவில்லை.ஆனால் அண்மையில் ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டி மீண்டும் பரபரப்பை கிளப்பியது. அண்மையில் தமிழில் வெளியான தி லெஜண்ட் திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்த ஊர்வசி ரவுத்தேலா, அண்மையில் அளித்த ஒரு நேர்காணலில், நான் வாரணாசியில் ஷூட்டிங்கில் இருந்தேன். அங்கிருந்து ஒரு நிகழ்ச்சிக்காக டெல்லிக்கு சென்றேன். 10 மணி நேரம் தொடர்ச்சியான ஷூட்டிங்கிற்கு பிறகு ரூமுக்கு திரும்பினேன். அங்கு என்னை பார்க்க வந்த Mr. RP எனக்காக நீண்டநேரம் லாபியில் காத்துக்கொண்டிருந்தார். நான் மிகுந்த சோர்வாக இருந்தேன். அதனால் எனது ஃபோனை கவனிக்கவில்லை. எனது ஃபோனுக்கு நிறைய மிஸ்டு கால்கள் வந்திருந்தன. 

நான் தூங்கி எழுந்தபோது 16-17 மிஸ்டு கால்கள் இருந்தன. எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது. பொதுவாக பெண்களுக்கு காக்கவைப்பது பிடிக்கும். அதன்பின்னர் அவரை தொடர்புகொண்டு, மும்பைக்கு வரும்போது சந்திப்போம் என்று கூறிவிட்டேன் என்றார் ரவுத்தேலா.

தனது இமேஜை டேமேஜ் செய்யும் விதமான ஊர்வசி ரவுத்தேலாவின் பேட்டிக்கு பதிலடி கொடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ரிஷப் பண்ட், வெற்று விளம்பரத்திற்காகவும், தலைப்பு செய்திகளில் இடம்பெறுவதற்காகவும் சிலர் நேர்காணலில் பொய்களாக பேசுகின்றனர். வெற்று பிரபலத்திற்காக பொய்களை அள்ளி தெளிக்கின்றனர். அவர்களை கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என்று பதிவிட்டு, சிறிது நேரம் கழித்து அதை டெலிட் செய்தார். ஆனாலும் அந்த ஸ்க்ரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

அதற்கு பதிலளித்த நடிகை ஊர்வசி ரவுத்தேலா, சின்ன பையா பேட், பந்து மட்டும் விளையாடு என்று நக்கலாக ரிஷப் பண்ட்டை சீண்டினார்.

இதையும் படிங்க - ஜடேஜா, பும்ராவை தொடர்ந்து மற்றொரு முக்கிய வீரரும் காயம்! டாஸோடு சேர்த்து பெரிய குண்டையும் தூக்கிப்போட்ட ரோஹித்

தேவையில்லாமல் இதை வளரவிட விரும்பாத ரிஷப் பண்ட், நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயத்தை நினைத்து மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடாது என்று இந்த மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அந்த வாக்குவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், ரிஷப் பண்ட்டின் பிறந்தநாளன்று, அவரது பெயரை குறிப்பிடாமல், பிறந்தநாள் வாழ்த்து என ஃப்ளையிங் கிஸ் கொடுத்த புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூற, அது செம டிரெண்டானது.
 

click me!