ரிக்கி பாண்டிங்கின் வீட்டிற்குள் புகுந்து காரை திருடிய திருடர்கள்..! போலீஸுக்கு பயந்து செய்த அதிர்ச்சி செயல்

By karthikeyan VFirst Published Feb 9, 2021, 3:16 PM IST
Highlights

மெல்போர்னில் உள்ள ரிக்கி பாண்டிங்கின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரை திருடிச்சென்றனர்.
 

ஆஸி., அணியின் முன்னாள் கேப்டனும் ஆல்டைம் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமானவர் ரிக்கி பாண்டிங். ஆஸி., அணிக்கு தொடர்ச்சியாக 2 முறை(2003 மற்றும் 2007) ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் பாண்டிங். 10 ஆண்டுகளுக்கும் மேலாக தனது கேப்டன்சியில் ஆஸி., அணியை அசைக்க முடியாத மாபெரும் அணியாக வைத்திருந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தியவர்.

சர்வதேச கிரிக்கெட்டில் கெத்தாக கோலோச்சிவிட்டு ஓய்வு பெற்ற பாண்டிங், வர்ணனையாளர், பயிற்சியாளர் உள்ளிட்ட பல வகைகளில் தொடர்ந்து கிரிக்கெட்டிலேயே தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்.

ஆஸி., மண்ணில் இந்திய அணி, 2வது முறையாக, அதுவும் முக்கியமான வீரர்கள் யாருமே இல்லாதபோதிலும், ஏ டீமை வைத்துக்கொண்டு டெஸ்ட் தொடரை வென்றதையடுத்து ஆஸி., அணி மீது கடும் அதிருப்தியடைந்திருந்தார் ரிக்கி பாண்டிங்.

மிகச்சிறந்த கிரிக்கெட் வீரரான பாண்டிங்கின் வீட்டிற்குள் புகுந்து திருடர்கள் காரை திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பாண்டிங்கின் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரை திருடர்கள் இருவர் திருடிச்சென்றனர். இதுதொடர்பாக போலீஸில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, போலீஸார் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்தனர்.

போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டை மற்றும் விசாரணையை கண்டு பயந்த திருடர்கள், மெல்போர்னின் கேம்பர்வெல் பகுதியில் காரை நிறுத்திவிட்டு தப்பிச்சென்றனர். இதையடுத்து காரை பாண்டிங்கிடம் ஒப்படைத்த போலீஸார், திருடர்களை தேடிவருகின்றனர். இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில், குறிப்பாக மெல்போர்னில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், ஆஸி., ஊடகங்கள் இச்செய்தியை பரபரப்பாக்கின.
 

click me!