IND vs ENG Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா – 5ஆவது விக்கெட்டை நோக்கி பஷீர்!

Published : Feb 24, 2024, 04:04 PM IST
IND vs ENG Test: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்தியா – 5ஆவது விக்கெட்டை நோக்கி பஷீர்!

சுருக்கம்

இங்கிலாந்திற்கு எதிரான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணிக்கு ஜோ ரூட் 122* ரன்கள் எடுத்து கொடுக்க அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 353 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் வந்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இவரைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 38 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ முறையில் ரெவியூ எடுத்து Umpires Call முறையில் ஆட்டமிழந்தார். ரஜத் படிதரும் நடுவரது முடிவில் 17 ரன்கள் எடுத்த நிலையில் சோயிப் பஷீர் பந்தில் ஆட்டமிழந்தார். ரவீந்திர ஜடேஜா 2 சிக்ஸர்கள் அடித்த நிலையில் சோயிப் பஷீர் பந்தில் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். ஒருபுறம் நிதானமாக விளையாடி வந்த தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 73 ரன்களில் பஷீர் பந்தில் கிளீன் போல்டானார்.

தனது 2ஆவது போட்டியில் விளையாடி வரும் சர்ஃபராஸ் கான் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14 ரன்களில் டாம் ஹார்ட்லி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் எல்பிடபிள்யூ முறையில் நடுவரது முடிவால் ஆட்டமிழந்தார். இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. தற்போது வரையில் 7 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

இங்கிலாந்து அணியைப் பொறுத்த வரையில் சோயிப் பஷீர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். டாம் ஹார்ட்லி 2 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

ஆஸ்திரேலியாவில் முதல் சதம் விளாசிய 'ரன் மெஷின்' ஜோ ரூட்! ஆஷஸ் டெஸ்ட்டில் அசத்தல்!
IND vs SA 3வது ஓடிஐ..இந்திய அணியில் 2 மாற்றங்கள்.. தமிழக வீரர் நீக்கம்.. பிளேயிங் லெவன் இதோ!