மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்..!

Published : Dec 27, 2020, 08:27 PM IST
மும்பை அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் நியமனம்..!

சுருக்கம்

சையத் முஷ்டாக் அலி தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.  

உள்நாட்டு டி20 தொடரான சையத் முஷ்டாக் அலி தொடர் ஜனவரி 10ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பை அணியின் கேப்டனாக, ஐபிஎல்லில் அபாரமாக ஆடி அசத்திய சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மும்பை அணியில் ஷ்ரேயாஸ் ஐயர், ஷர்துல் தாகூர், அர்ஜூன் டெண்டுல்கர் ஆகியோருக்கு இடம் கிடைக்கவில்லை. தோள்பட்டை காயத்திலிருந்து மீண்டுவரும் ஷ்ரேயாஸ் ஐயர், மும்பை அணியில் எடுக்கப்படவில்லை.

மும்பை அணி:

சூர்யகுமார் யாதவ்(கேப்டன்), ஆதித்ய தரே(துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஆகார்ஷித் கோமல், சர்ஃபராஸ் கான், சித்தேஷ் லத், ஷிவம் துபே, ஷுபம் ரஞ்சன், சுஜித் நாயக், சாய்ராஜ் பாட்டீல், துஷார் தேஷ்பாண்டே, தவால் குல்கர்னி, மினாத் மஞ்சரேக்கர், பிரதமேஷ் தேக், அதர்வா அன்கோல்கர், ஷேஷான்க் அட்டர்டே, ஷாம்ஸ் முலானி, ஹர்திக் டாமோர், ஆகாஷ் பர்கார், சுஃபியான் ஷேக்.
 

PREV
click me!

Recommended Stories

IPL 2026: கடைசி நேரத்தில் உயிர்த்தெழுந்த KKR.. ஆலன், ரகுவன்ஷி தெறி பேட்டிங்.. GT-க்கு 247 ரன்கள் இலக்கு
Sanju Samson: ஆரஞ்சு கேப் ரேஸில் சஞ்சு சாம்சன் அதிரடி என்ட்ரி! மிரளும் எதிரணிகள்!